shadow

சென்னையில் இருந்து தேனி சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

சென்னை கோயம்பேட்டில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தேனிக்கு நேற்று இரவு கிளம்பியது. இந்த பேருந்தில் 35 பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் என்ற பகுதிக்கு சென்றபோது திடீரென தீப்பிடித்தது.

இதனையறிந்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக தூங்கிக்கொண்டிருந்த பயணிகளை எழுப்பி பேருந்தில் இருந்து இறங்குமாறு அறிவுறுத்தினார். பயணிகள் இறங்கி கொண்டிருந்தபோதே பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியது. பேருந்து ஓட்டுனரின் துரிதமான செயலால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பேருந்து தீப்பிடித்து எரிந்த தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply