அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது தெரிந்ததே

குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 38 பேர்கள் மற்றும் நேற்று மட்டும் 44 பேர்கள் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சென்னையில் இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ளதாக வெளிவந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமின்றி கொரோனாவால் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply