shadow

சென்னையில் இன்று பள்ளிகள் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை முழுவதும் கனமழை பெய்து வந்த நிலையில் நேற்றிரவும், இன்று அதிகாலையும் மழை பெய்து வருகிறது. நேற்று வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த தமிழக அரசு இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் கணித்ததுபோலவே நேற்று இரவு சென்னையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. எனவே இன்று சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலம் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்து கலெக்டரின் அறிவிப்புக்காக காத்திருந்தனர்.

ஆனால் சற்றுமுன்னர் தமிழக அரசு அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் இன்று வழக்கம்போல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட பள்ளிகள் இயங்கும் என அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் வேறு வழியின்றி பள்ளிகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

Leave a Reply