செந்தில்பாலாஜி அரசியல்வாதி அல்ல, அரசியல் வியாபாரி; முதல்வர் பழனிசாமி
அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தொகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்தபோது, ‘மக்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றும் வேட்பாளர் செந்தில்பாலாஜி தான் என்றும், மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக எம்.எல்.ஏவாக நினைக்கிறார் என்றும் கூறினார்.
மேலும் செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி என்றும், அவர் அரசியல்வாதி அல்ல என்றும், முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.