சூர்யாவுடன் மீண்டும் இணைந்த விக்னேஷ் சிவன்!

சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் மீண்டும் சூர்யாவுடன் இணைந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

சூர்யா நடித்த ‘என்.ஜி.கே. திரைப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தின் பாடல்களில் ஒன்றை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். ”திமிரனும்டா’ என்று தொடங்கும் இந்த பாடலை ஜித்தன் ராஜ் என்பவர் பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இந்த பாடல் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘இயக்குனர் செல்வராகவனுடன் பணிபுரிய வேண்டும் என்ற எனது கனவு நனவாகிவிட்டாது. மேலும் இசையமைப்பாளர் யுவன், சூர்யா மற்றும் தயாரிப்பாளர் பிரபு ஆகியோர்களுடன் பணிபுரிந்தது பெருமை’ என்று கூறியிருந்தார்.

Leave a Reply