சூர்யாவின் 220 அடி உயர கட்-அவுட் அகற்றம்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருத்தணி புறவழிச்சாலையில் ரூ 6.5 லட்சம் செலவில் வைக்கப்பட்டிருந்த 215 அடி உயர சூர்யா கட் அவுட் அகற்றப்பட்டதால் சூர்யா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

நாளை சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படம் வெளியாகவிருப்பதை அடுத்து திருத்தணி புறவழிச்சாலை அருகே சூர்யா ரசிகர்கள் கடந்த சில நாட்களாக 220 அடியில் பிரமாண்டமான கட்-அவுட்டை வைக்கும் பணியில் ஈடுபட்டு நேற்று அந்த பணியை முடித்தனர்.

இந்த நிலையில் அனுமதியின்றி கட் அவுட் வைத்ததாக நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரி தலைமையில் ஊழியர்கள் கட் அவுட்டை அகற்றி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply