சூப்பர் ஓவரில் அசத்திய ராகுல், விராத்: இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் தலா 165 ரன்கள் எடுத்ததால் போட்டியில் மீண்டும் டை ஆனது
இதனை அடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 13 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 16 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது
கேஎல் ராகுல் 10 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். விராட் கோலி 6 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியால் இந்தியா 4-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.