shadow

சூடானில் ஹெலிகாப்டர் விபத்து: ஆளுனர் பரிதாப பலி

sudanசூடான் நாட்டில் நடந்த ஒரு பயங்கரமான ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் மாகாண ஆளுநர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

சூடான் நாட்டின் நேரப்படி ஞாயிறன்று காலை விவசாய நிலங்களைப் பார்வையிடுவதற்காக அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் புறப்பட்டார். எத்தியோபியா எல்லை அருகே கடாரப் மாநில ஆளுநர் சென்ற ஹெலிகாப்டர் தரையில் மோதி வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் ஆளுநர் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply