அதிர்ச்சி தகவல்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று மதியம் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
தற்கொலைக்கு முன் சுஷாந்த் கடிதம் எழுதி வைக்கவில்லை என்பதும் அவரது மொபைல் போனில் தற்கொலைக்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லை என்பதாலும் போலீசார் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதி விசாரணை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சிறு வயதிலேயே தாயை இழந்த சுஷாந்த் சிங், தனது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில் தாய் குறித்து உருக்கமாக பதிவு செய்துள்ளதை நெட்டிசன்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.