சுவரில் இருந்த பான்பராக் கறையை சுத்தம் செய்த கலெக்டர்!
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கலெக்டர் ஒருவர் சுவரில் இருந்த பான்பராக் கரையை தானே சுத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அகோலா என்ற மாவட்டத்தின் கலெக்டராக ஆஸ்டிக் குமார் பாண்டே என்பவர் பொறுப்பேற்க வந்தபோது கலெக்டர் அலுவலகத்தின் சுவரில் பான்பராக் போட்டு துப்பிய கரையை பார்த்தார்.
அந்த கரையை சுத்தம் செய்ய யாரும் முன்வராமல் அவரவர் வேலையை பார்த்து கொண்டு சென்றதை கண்ட கலெக்டர் பாண்டே, உடனே தனது உதவியாளர்களிடம் ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் துண்டு ஒன்றையும் கொண்டு வருமாறு கூறினார். துண்டை தண்ணீரில் நனைத்து முட்டி போட்டு உட்கார்ந்து உடனே அவரே சுவரில் இருந்த பான்பராக் கரையை சுத்தம் செய்ய தொடங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த் அவரது உதவியாளர்கள் அவர்களும் சுத்தம் செய்தனர். சில நிமிடங்களில் அந்த சுவர் சுத்தமானது. கலெக்டரின் இந்த நடவடிக்கை அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது
Leave a Reply
You must be logged in to post a comment.