சுபஸ்ரீயின் உயிரை பறித்தது வெறும் 1,000 ரூபாயா? அதிர்ச்சித் தகவல்
சென்னை பள்ளிக்கரணை அருகே சுபஸ்ரீ என்ற இளம்பெண் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று கீழே விழுந்ததால் துரதிஷ்டவசமாக சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த மரணம் குறித்து தற்போது போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான பேனரை வைப்பதற்கு மாநகராட்சி ஊழியர்களுக்கு அதிமுக நிர்வாகி ஜெயகோபாலன் தலா ரூபாய் 1000 லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
மாநகராட்சி ஊழியர்கள் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்காமல் பேனர் வைக்க அனுமதி தராமல் இருந்திருந்தால் சுபஸ்ரீ உயிர் பறிபோய் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஒரு உயிரின் விலை ஆயிரம் ரூபாய்தானா? என்று டுவிட்டரில் சமூக ஆர்வலர்கள் கொதித்தெழுந்துள்ளனர். லஞ்சம் கொடுத்த அதிமுக நிர்வாகி மீதும், பேனர் வைக்க லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன
Leave a Reply
You must be logged in to post a comment.