சுந்தர் சியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தை இயக்கிய சுந்தர் சி அடுத்ததாக ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வந்த ‘நட்பே துணை’ என்ற படத்தை தயாரித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற இந்த படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கவுள்ளன்.
பார்த்திபன் தேசிங்கு இயக்கிய இந்த படத்தில்ஹிப்ஹாப் தமிழா ஆதி, அனேகா, கரு பழனியப்பன், விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.