இந்தியாவின் 68வது சுதந்திரதின கொண்டாட்டங்கள் நேற்று நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா என்ற இடத்தில் தேசியக்கொடியை ஏற்றிவிட்டு உரையாற்றிய அம்மாநில கவர்னர் திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜார்கண்ட் மாநில கவர் சையத் அகமதி நேற்று காலை தும்காவில் சுதந்திர தின நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி மேடையிலேயே விழுந்தார். பின்னர் அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.சிறிது நேர சிகிச்சைக்கு பின்னர் அவர் ஆளுனர் மாளிகை திரும்பியதாக ஆளுனர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.