சுஜித்தின் பாதி உடல் இன்னும் ஆழ்துளையில் தான் உள்ளதா? அதிர்ச்சி தகவல்

நடுக்காட்டுப்பட்டி சிறுவன் சுஜித்தின் உயிரை காப்பாற்ற முடியாத நிலையில் அந்த சிறுவனின் உடலையாவது மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என தேசிய மீட்பு படையினர் கிட்டத்தட்ட 2 மணி நேரம் போராடி உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனையும் செய்து, தற்போது அந்த சிறுவனின் உடல் சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டும் முடிந்துவிட்டது

இந்த நிலையில் தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது. இந்த செய்தியின்படி ஏர் லாக் செய்யப்பட்ட சுஜித்தின் உடலின் ஒரு பகுதி மட்டும்தான் மீட்கப்பட்டுள்ளதாகவும், உடலின் பெரும்பகுதி இன்னும் அந்த ஆள்துளையிலேயே இருப்பதாகவும், கிடைத்த உடலின் சில பாகங்களை மட்டும் பிரேத பரிசோதனை செய்து நல்லடக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும், இந்த தகவல் சிறுவனின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகௌம், அந்த தொலைக்காட்சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது

சுஜித்தின் உயிரைத்தான் காப்பாற்றவில்லை உடலையாவது முழுமையாக கைப்பற்றி பெற்றோரிடம் ஒப்படைத்து இருக்கலாம் என பலர் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போக விசாரணையில் தான் தெரியவரும். ஆனால் சுஜித் இருந்த ஆழ்துளை கிணறு கான்க்ரீட் கலவையால் மூடப்பட்டு விட்டதால் இனி அடுத்தக் கட்ட விசாரண வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது

Leave a Reply