சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கு: பாமகவினர் 6 பேர் விடுதலை
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடி ஒன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக-வினர் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை கடந்து செல்லும்போது தகராறு ஏற்பட்டடு. இந்த தகராறில் சுங்கசாவடி சேதப்படுத்தப்பட்டன.
இதுகுறித்த இந்த வழக்கு ஒன்றில் நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ஜமுனா அளித்த தீர்ப்பில் இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் நிருப்பிக்கபடாததால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாமக-வைச் சேர்ந்த கேசவன், சக்திவேல், ஜீவானந்தம் உள்ளிட்ட 6 பேரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.