பரபரப்பு தகவல்

நடிகை விஜயலட்சுமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்த ஒரு வீடியோவில், ‘‘என்னை இரண்டு நபர்கள் அவமானப்படுத்தியதாகவும் அதனால் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் முன் ஜாமீன் எடுக்க யாரும் அனுமதிக்ககூடாது என்றும், எனது மரணத்திற்கு அந்த இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் இருவர் பெயரையும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நான் இன்னும் ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் என்னை வாழ விடாமல் செய்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாகவும், அவருடைய உறவினர்கள் அவரை சென்னை அடையார் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றிவிட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் சென்னை அடையாறு காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply