சீனாவில் நடைபெற்ற 5000 மீட்டர் நடை போட்டி: ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசுக்கு தங்கப்பதக்கம்

சீனாவில் நடைபெற்ற 5000 மீட்டர் நடைப்போட்டியில், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஈஞ்சார் என்ற பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, காவல்துறை பணியில் இருந்துகொண்டே மாநில மற்றும் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் கடந்த 27 ஆண்டுகளாக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், சீனாவில் நடைபெற்ற உலக காவல்துறை தடகளப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற கிருஷ்ணமூர்த்தி, 5000 மீட்டர் வேக நடைப் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply