சீனாவில் இருந்து வெளியேற அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் உத்தரவு

அமெரிக்கா மற்றும் சீனா நாடுகள் இடையே கடந்த சில வருடங்களாக வர்த்தகப்போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் உடனடியாக சீனாவில் இருந்து வெளியேற அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இதுகுறித்து டிரம்ப் தனது டுவிட்டரில், ‘அமெரிக்காவுக்கு சீனா தேவையில்லை, வெளிப்படையாக கூறினால், சீனப் பொருட்கள் இல்லாமல் அமெரிக்கா இதைவிட நன்றாகவே இருக்கும் என்று கூறிய டிரம்ப், சீனாவிடம் கடந்த பல ஆண்டுகளாக பல லட்சம் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை அமெரிக்கா இழந்துள்ளது என்றும் இனியும் சீனாவை முட்டாள்தனமாக நம்பி அமெரிக்கர்கள் இழப்பையே சந்திக்க வேண்டாம் என்பதால் உடனே சீனாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கர்களின் நூற்றுக்கணக்கான, லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள அறிவுசார் சொத்துரிமையை சீனா திருடி விட்டதாகவும், அதைத் தொடர சீனர்கள் விரும்புவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் எண்ணம் ஈடேற விடமாட்டேன் என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி மாற்று இடத்தை தேட வேண்டும் என்று கூறியுள்ள ட்ரம்ப், அமெரிக்கா திரும்பி வந்தும் பொருட்களைத் தயாரிக்க பரிசீலிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply