சிறையில் சோபியாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சோபியா உடல் நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் சோபியா என்ற இளம்பெண் நேற்று விமானத்தில் தமிழிசை செளந்தரராஜன் முன் பா.ஜ.க.விற்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், அப்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் சோபியா கைது செய்யப்பட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டார். பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செயல்படுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் சோபியாவை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்நிலையில் அவருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டநிலையில் சோபிய தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.