சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் முன்னாள் உலக அழகி

சிரஞ்சீவி நடித்து வரும் ‘சயிர நரசிம்மரெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது இந்த படத்திற்காக சிரஞ்சீவி டப்பிங் பேசி வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த படத்தை கொரட்டலா சிவா இயக்கவுள்ள் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஐஸ்வர்யாராய் இந்த படத்தின் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘நந்தினி’ கேரக்டரில் நடிகை ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply