சிம்புவுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை
கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான `விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ள நிலையில் இந்த படத்தில் அனுஷ்கா நாயகியாகநடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிம்பு,அனுஷ்கா ஆகிய இருவரும் ‘வானம்’ என்ற படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் நடிக்க முதலில் மாதவன் பேசப்பட்ட நிலையில், தற்போது முதல் பாகத்தில் நடித்த சிம்புவே திரும்பவும் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த த்ரிஷாவே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நாயகியாக அனுஷ்கா நடிக்கவைக்கப்பட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே அனுஷ்கா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.