சிபிராஜின் அடுத்த படத்தில் நடிக்கும் இரு முன்னணி இயக்குனர்கள்!

சிபிராஜ் நடிக்கும் அடுத்த திரைப்படமான ‘வால்டர்’ திரைப்படத்தில் கவும்தம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இரு இயக்குனர்கள் நடிக்கவுள்ளனர்.

சிபிராஜ் நடித்து வரும் ‘வால்டர்’ என்ற படத்தை அன்பு என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வரும், நிலையில் இந்த படத்ஹ்டில் சிபிராஜ் ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா என்ற நடிகை நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் தற்போது இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இதுகுறித்து சிபிராஜ் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘கவுதம் மேனன் அவர்களுடனும், சமுத்திரக்கனி அவர்களுடனும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply