shadow

சிபிஐ புதிய இயக்குனராக ரிஷி கே.சுக்லா நியமனம்

சிபிஐ இயக்குனர்கள் அலோக் வெர்மா மற்றும் ராஜேஸ் அஸ்தானா இடையே பரஸ்பரம் லஞ்சப்புகார் எழுந்ததை அடுத்து இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு இடைக்கால சிபிஐ இயக்குனராக அலோக் வெர்மா நியமனம் செய்யப்பட்டர். இந்த நிலையில், சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக ஐ.பி.எஸ் அதிகாரி ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநில காவல்துறை தலைவராக பணியாற்றிய இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ அமைப்பின் புதிய தலைவர் நியமனத்தை சற்றுமுன் பிரதமர் தலைமையிலான குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. சிபிஐ அமைப்பிற்கு புதிய நிரந்தர தலைவர் நியமனம் செய்யப்பட்டுவிட்டதால் கடந்த ஒரு மாதமாக ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply