சினேகாவை அடுத்து தனுஷின் இரண்டாவது நாயகி!
தனுஷ் நடிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கி வரும் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் தனுஷ் இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க்விருப்பதாகவும் அப்பா வேடத்திற்கு சினேகா ஜோடியாக நடித்து வரும் நிலையில் மகன் தனுஷ் வேடத்தில் நடிக்க நிக்கி கல்ரானியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் தனுஷூடன் முதல்முறையாக நிக்கி கல்ரானி இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.