சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் நாளில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேதியை மாற்ற வேண்டும் என்று அதிமுக, பாஜக தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பான வழக்கும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் தேதியை மாற்ற கோரும் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனவே தேர்தல் தேதியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது

மதுரை மக்கள் இதுகுறித்து எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காத நிலையில் அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தை பெரிதாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply