சிசேரியனுக்கு சில நிமிடங்களுக்கு முன் திருமணம் செய்த கர்ப்பிணி பெண்
அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த மேரி என்ற இளம்பெண் காபே என்ற இளைஞரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே நெருங்கி பழகியதில் மேரி கர்ப்பம் அடைந்தார்.
இந்த நிலையில் நிறைமாத கரிப்பிணியான மேரிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சையின் மூலம்தான் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் கூறினர். இதனையடுத்து சிசேரியனுக்கு சில நிமிடங்களுக்கு முன் மேரி திருமணம் செய்ய முடிவு செய்தார். டாக்டர்கள் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
இதன்பின் நடந்த பிரசவத்தில் மேரிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஜேட் கேதரின் ஜோன்ஸ் என பெயரிட்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.