உலக அளவில் சாதனை செய்த சென்னை

உலக அளவில் சிசிடிவி பயன்படுத்தும் நகரங்களில் எண்ணிக்கையில் சென்னை சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று உலக அளவில் சிசிடிவி அதிகம் பயன்படுத்தும் நகரங்கள் குறித்த கருத்துக் கணிப்பு ஒன்றை எடுத்து

அதில் உலக அளவில் சென்னை 21-வது இடத்தில் இருப்பதாகவும் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது

சென்னையில் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அவை பெரும்பாலும் செயல்பாட்டில் இருப்பதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சென்னையை அடுத்து ஹைதராபாத் நகரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதிக சிசிடிவி பொருத்தப்பட்ட நகரங்களில் முதல் 20 நகரங்களில் 18 இடங்கள் சீனாவில் இருப்பதாக அந்நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply