சிக்னல் கோளாறு – சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதம்
தாம்பரத்தில் சிக்னல் கோளாறு காரணமாக சென்னை வரும் விரைவு ரயில்கள் அரைமணி நேரம் தாமதம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சிக்னல் கோளாறால் விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள் பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சிக்னலை தொழில்நுட்ப வல்லுனர்கள் சரி செய்து கொண்டிருப்பதாகவும் இந்த பணிகள் முடிந்த பின்னர் உடனடியாக மீண்டும் ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அலுவலகம் செல்பவர்களும் இந்த தாமதம் காரணமாக சிரமம் அடைந்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.