சிக்கினான் லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையன்? 5 கிலோ நகைகள் பறிமுதல்

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், திருவாரூர் மாவட்டத்தில் ஒருவன் நகைகளுடன் சிக்கியுள்ளதாகவும், அவனிடமிருந்து அதே கடையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்க வெளிவந்துள்ளது

திருச்சி லலிதா ஜூவல்லரியில் 28 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் அவற்றில் 5 கிலோ பிடிபட்டுள்ளதால் மீதி நகைகளும் விரைவில் பிடிபடும் என எதிர்பார்க்கப்படுகிறது

திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த ஒருவன் ஆற்றங்கரை வழியாக தப்பிச் சென்றுவிட, மற்றொருவன் போலீசாரின் பிடியில் சிக்கினான். அவன் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் ஏராளமான தங்கநகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நகைகளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களில் இருந்த பார் கோடை வைத்து சோதனையிட்டபோது அந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கொள்ளையன் சிக்கியது குறித்து திருச்சி தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி போலீசார் திருவாரூர் சென்று மணிகண்டனை திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

 

Leave a Reply