இன்று முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லாது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

போட்டியின் முதல் நாளே ஒரு அணியின் வீரர்களை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையில் பேசிய கவாஸ்கருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது

சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் இல்லாததது சிஎஸ்கே அணிக்கு பெரும் இழப்பு இன்றும் இதனால் அணியில் பெரிய வெற்றிடம் இருப்பதாகவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஒரு நல்ல ஐபிஎல் அணி என்றால் அதில் அனுபவமும், இளமையும் சரியாக கலந்து இருக்க வேண்டும் என்றும், ஆனால் சிஎஸ்கே அணி அவ்வாறு இல்லை என்றும், அதனால் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பை வெல்வது கடினம் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் தோனியின் அனுபவம் நிச்சயம் சிஎஸ்கேவுக்கு கோப்பையை கைப்பற்றி கொடுக்கும் என்றே அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Leave a Reply