சாஹல் அபார பந்துவீச்சு: 87 ரன்களில் சுருண்ட இலங்கை
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே கட்டாக்கில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சாஹல் மற்றும் பாண்டியா ஆகியோர்களின் அபார பந்துவீச்சு காரணமாக இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
முதலில் பேட்டிங் செய்த இந்தியா ராகுல் மற்றும் தோனியின் அதிரடி பேட்டிங்கால் 20 ஓவர்களில் 180 ரன்கள் குவித்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் ரன்கள் எடுக்க திணறியது.
குறிப்பிட்ட இடைவெளியில் சாஹல் 4 விக்கெட்டுக்களையும் பாண்டியா மூன்று விக்கெட்டுக்களையும் குவித்ததால் இறுதியில் இலங்கை அணி இறுதியில் 16 ஓவர்களில் வெறும் 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது
Leave a Reply
You must be logged in to post a comment.