சாலையோரத்தில் தூங்கியவர் மீது காரை ஏற்றி கொலை செய்தவர் கைது!

டெல்லியில் சாலையோரத்தில் வீடில்லாத மக்கள் தூங்கிய நிலையில் அவர்கள் மீது காரை ஏற்றி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்

டெல்லியில் உள்ள நீலாகும்பட் என்ற பகுதியில் வீடில்லாத பொதுமக்கள் சிலர் சாலையோரத்தில் இரவில் தூங்கியுள்ளனர். அந்த சமயம் 36 வயது நபர் ஒருவர் காரை வேகமாக ஓட்டி வந்தார். கார் அவரது கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரத்தில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரைவரை கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply