சாலையில் சிதறிக்கிடந்த ரூ.2000 நோட்டுக்கள்: தமிழகத்தில் பெரும் பரபரப்பு

நாங்குநேரி தொகுதியில் உள்ள அம்பலம் என்ற பகுதியில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதாக வந்த தகவலை அடுத்து, அந்தப் பகுதி இளைஞர்கள் அவர்களை பிடிக்க சென்றனர்.

இதனையடுத்து பணம் கொடுக்க வந்த கட்சிக்காரர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பியதாகவும், அவர்களை இளைஞர்கள் துரத்தியபோது அவர்கள் கையில் வைத்திருந்த ரூ.2000 நோட்டுக்கள் சாலையில் சிதறியதாகவும் தகவல்கல் வெளிவந்துள்ளது

இதனையடுத்து சிதறிக் கிடந்த 2 லட்சத்து 78 ரூபாயை பறிமுதல் செய்த இளைஞர்கள் அதனை போலீசில் ஒப்படைத்தனர். தப்பிச்செல்ல முயன்ற கட்சிக்காரர்களையும் பிடித்து போலீசில் அந்த இளைஞர்கள் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார்களும், தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே நாங்குநேரியில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதால் அந்த தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

Leave a Reply