shadow

சாலையில் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்: அதிர்ச்சியில் ராஜஸ்தான் தேர்தல் அதிகாரிகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் 119 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக இருந்த நிலையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்துள்ளதால் இழுபறி இன்றி நிச்சயம் ஏதாவது ஒரு கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் சாலையில் கிடந்ததால் தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ள்னர். இதுகுறித்து நடந்த விசாரணையின் முடிவில் தேர்தல் அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply