சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் ஆஜராக சம்மன்
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மனைவியும் முத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம். மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் சார்பில் ஆஜராகி இதற்காக ரூ.1 கோடி வக்கீல் கட்டணமாக பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி நளினி சிதம்பரத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
ஆனால் இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி நளினி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதித்தார். இந்த தடையை நீக்கக்கோரி அமலாக்கத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி தனி நீதியதியின் உத்தரவுக்கு தடை விதித்ததோடு, புதிய சம்மனை அமலாக்கத்துறை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், மே 7-ம் தேதி நளினி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.