நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிக்கொண்டிருந்தது
இந்த நிலையில் 17.1 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெற்றிக்கு தேவை 18 பந்துகளில் 29 ரன்கள் என்ற நிலை இருந்தது
இந்த நிலையில் 17.1வது ஓவரின் முதல் பந்திலேயே ஜடேஜா அவுட் ஆனதை அடுத்து தோனி களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சாம் கர்ரன் இறங்கினார் இதற்கு உடனடியாக பலன் கிடைத்தது
அதிரடியாக 2 சிக்சர் ஒரு பவுண்டரி அடித்த சாம் கர்ரன் அடுத்த ஓவரிலேயே வெற்றிக்கு தேவை வெறும் 12 ரன்கள் என்ற நிலைமையை ஏற்படுத்தினார். எனவே மிகச் சரியான முடிவு எடுத்த தோனிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.