சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா திடீரென கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகினார்

சிஎஸ்கே அணியில் இணைந்து விளையாடுவதற்காக துபாய் சென்று இருந்த சுரேஷ் ரெய்னா திடீரென நாடு திரும்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வந்தாலும் நேற்று சாம் கர்ரன் ஆட்டம் அபாரமாக இருந்தது

இதனை அடுத்து சுரேஷ் ரெய்னா அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இக்கட்டான நிலையில் மிகவும் சிறப்பாக விளையாடினார் சாம் கர்ரன் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

சுரேஷ் ரெய்னா மற்றும் சாம் கர்ரன் ஆகிய இருவருமே இடது கை ஆட்டக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply