சாதி, மதம் இரண்டுமே பெண்களுக்கு எதிரானது: இயக்குனர் ரஞ்சித்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து திரையுலகினர் தங்கள் ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் தனது டுவிட்டரில் ஏற்கனவே தனது கருத்தை பதிவு செய்துள்ளர.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நேற்று நடிகர் சூர்யா ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டார். ஒரு ஆராய்ச்சி கட்டுரை போல் இருந்த இந்த அறிக்கையை பலர் பாராட்டிய நிலையில் தற்போது ரஞ்சித்தும் சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது:

‘தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமையான சூர்யா அவர்களே, உங்களுடைய பதிவு நம் காலத்துக்கு மிகவும் தேவையானது. ஒரு பெண் குழந்தையின் தகப்பனாக அவருடைய பயங்களோடும், எதிர்பார்ப்போடும் என்னால் ஒத்து போக முடிகிறது. சாதி, மதம் இரண்டுமே பெண்களுக்கு எதிரானது என்பதை உணர்வோம்! என்று கூறியுள்ளார்.

Leave a Reply