சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு
2018ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போது பிரபல தமிழ் எழுத்தாளர், தமிழ் சினிமாவின் திரைக்கதையாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வு பெற்றார்.
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் என்ற புத்தககத்திற்காக அவருக்கு இந்த உயரிய விருது அளிக்கப்படவுள்ளது. மேலும் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ படம் தொடங்கி பல படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் சாகித்ய விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை ரஜினிகாந்த் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். ஏற்கனவே கமல் உள்பட பல திரையுலக பிரபலங்கள் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.