shadow

சர்க்கரை நோய்க்கு மருந்து: ஒரே இரவில் ரூ.12 ஆயிரம் கோடி சம்பாதித்த மாணவர்கள்

சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டு பிடித்த மாணவர்கள் ஒருவர் நடத்தி வந்த நிறுவனம் ஒன்றை, மருந்து உற்பத்தி உலகின் ஜாம்பவான் நோவோ நோர்டிஸ்க் விலைக்கு வாங்கியுள்ளதால் அந்த மாணவருக்கு ஒரே இரவில் ரூ.12 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் அந்தோனி டேவிஸ், மற்றும் அவரது மாணவர்கல் ஹாரி டெஸ்டேக்ரோயிக்ஸ், டான் ஸ்மார்ட் என்ற மூவர் ஸிய்லோ என்ற சிறிய நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் நோய்க்கான மருந்து ஒன்றை கண்டறிந்தனர்.

இந்த மருந்து குறித்து கேள்விப்பட்ட மருந்து உற்பத்தி உலகின் ஜாம்பவான் நிறுவனமான டென்மார்க்கை சேர்ந்த நோவோ நோர்ஸ்டிக், ஸிய்லோ நிறுவனத்தை 623 மில்லியன் பவுண்ட் கொடுத்து விலைக்கு வாங்கியது. இதில், ஸிய்லோ நிறுவனத்தில் 23 சதவிகித பங்குகளை வைத்திருந்த ஹாரிக்கு 143 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய்) கிடைத்துள்ளது.

Leave a Reply