shadow

‘சர்கார்’ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமான சர்கார் திரைப்படம் இன்னும் இரண்டு வாரங்களில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அதிலும் இந்த முறை விஜய்யின் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் புரமொஷனுக்காக விஜய் ஐதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு வரவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன

ஆனால் இந்த செய்தியை விஜய்யின் மேனேஜர் மறுத்துள்ளார். ஐதராபாத் மட்டுமின்றி விஜய் இப்போதைக்கு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்றும் இதுகுறித்த வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply