சரவணபவன் ராஜகோபால் உடல் நாளை நல்லடக்கம்

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் அவர்கள் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நிலையில் நேற்று அவர் உடல்நலக்குறைவால் காலமானார்

இந்த நிலையில் அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ராஜகோபாலின் உடல் திருச்செந்தூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரில் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது

புன்னைநகரில் உள்ள ராஜகோபாலனுக்கு சொந்தமான தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்காக இந்த இடம் தற்போது ஜேசிபி இயந்திரத்தை வைத்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் நாளை அந்த பகுதியில் உள்ள பொது மக்களும் இந்த இறுதி சடங்கில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply