சரவணபவன் அதிபருக்கு ஆயுள்தண்டனை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

2001ம் ஆண்டு ஜீவஜோதி என்பவரின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

மேலும் அவர் வரும் ஜூலை 7ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டில் இருந்ததால் இதுநாள் வரை ராஜகோபால் ஜாமீனில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதை அடுத்து ராஜகோபால் வரும் ஜூலை 7ஆம் தேதி சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply