சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து தெரிவித்த 9 பேர் கைது

நாகை அருகே உள்ள பொறையாறு என்ற பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக 9 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

153(ஏ) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சமூக வலைதளங்களில் பிற சமூகத்தை பற்றி அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply