சமூக ஆர்வலர் முகிலன் எங்கே? சுவரொட்டிகளை ஒட்டிய சிபிசிஐடி

சமூக ஆர்வலர் முகிலன் சமீபத்தில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில் திடீரென காணாமல் போனார். அவரை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சமீபத்தில் எழும்பூர் ரயில் நிலைய சிசிடிவியில் முகிலன் ரயில் நிலையத்திற்கு வெளியே சென்று பின் மீண்டும் உள்ளே வந்தது தெரிந்தது

இந்த நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை காணவில்லை என சென்னையில் சிபிசிஐடி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. அதில் முகிலனின் முழுவிபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிபிசிஐடியின் இந்த நடவடிக்கை முகிலனை கண்டுபிடிக்க உதவுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply