shadow

சமுத்திரக்கனியின் அடுத்த படம் ‘சத்தம்’

samuthiraகதாநாயகன், வில்லன், குணசித்திரம் என எந்த வேடம் கொடுத்தாலும் அந்த வேடத்தில் தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘தற்காப்பு’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருகின்றது. இந்நிலையில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கிய பல படங்களில் அவருடைய உதவியாளராக பணிபுரிந்த ராஜதுரை என்பவர் இயக்கவிருக்கும் முதல் படத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கின்றார். இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஐஸ்வர்யா தத்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் கோபி என்பவர் அறிமுகமாகிறார்.  

இந்த படத்திற்கு ‘சத்தம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது ஒரு ஆக்சன் த்ரில் படம் என்றும் கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் கொடைக்கானலில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கிட்டத்தட்ட முழுபடமும் கொடைக்கானலிலேயே எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply