சபாநாயகர் நோட்டீஸுக்கு எதிரான வழக்கு: வாபஸ் பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள்
தினகரன் அணியின் அதிமுக எம்எல்ஏக்கள் பிரபு, கலைசெல்வன், ரத்தினசபாபதி இருப்பதாக வெளியான செய்தியை அடுத்து சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பினார். இந்த விவகாரத்தில் சபாநாயகர் நோட்டீஸுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் பிரபு, கலைசெல்வன், ரத்தினசபாபதி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்
இந்த நிலையில் சமீபத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பிரபு, கலைசெல்வன், ரத்தினசபாபதி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். இதனையடுத்து இன்று இவர்கள் மூவரும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை இன்று வாபஸ் பெற்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.