சபரிமலை விவகாரத்தில் கலவரங்களை உருவாக்குவது யார்? கமல் பதி
’சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பிரச்சனையால், கேரளாவில் கலவரம் உருவாகவில்லை என்றூம், கலவரத்தை ஒருசிலர் உருவாக்குகிறார்கள் என்பது தான் என்னுடைய கருத்து’என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கலவரம் உருவாக காரணம் வலதுசாரிகளே என்றும் கமல் மேலும் தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி தங்கள் கட்சியை கூட்டணிக்கு அழைப்பது அவரது நிலைப்பாடு என்றும், போவோமா? இல்லையா? என்று முடிவெடுப்பது எங்களின் நிலைப்பாடு என்றும் கமல் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.
மேலும் மேகதாது விவகாரத்திற்காக அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது நல்லதுதான் என்று கமல்ஹாசன் மேலும் கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.