சபரிமலையில் பெண்களுக்கு தடையா? மக்களவையில் தனிநபர் மசோதா தாக்கல்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நிலையில் இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் மதிக்காமல் பெண்கள் சபரிமலையில் நுழைய பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்

இந்த நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தடை விதிக்கவும், பழைய நடைமுறையை பின்பற்ற வழிவகை செய்யும் விதமாக மக்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது

இந்த மசோதாவை கேரள மாநிலத்தின் கொல்லம் தொகுதி எம்.பி பிரேமச்சந்திரன் தாக்கல் செய்தார்.

Leave a Reply