சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்ட வேண்டும்: பிரபல நடிகர் ஆவேசம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண்களை வெட்டிப்போட வேண்டும் என பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளசி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் உச்சநீதிமன்ரம் அனைத்து வயது பெண்களூம் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து அக்டோபர் 18ஆம் தேதி முதல் பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மலையாள நடிகர் கொல்லம் துளசி நிகழ்ச்சி ஒன்றில்ல் பேசும்போது, “சபரிமலைக்கு பெண்கள் வந்தால் அவர்களை பாதியாக வெட்டிப்போட வேண்டும். ஒரு பாதியை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். இன்னொரு பாதியை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வீச வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
கொல்லம் துளசியின் இந்த பேச்சுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.